29 C
Chennai
December 5, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

மூடுவிழா கண்டுள்ள சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலை உருவாக்கிய பள்ளி…

சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலை உருவாக்கிய விழுப்புரம் ரயில்வே
பள்ளி போதிய மாணவர்கள் இல்லை என்று மூடுவிழா கண்டுள்ளதால் பள்ளியின் ஆலமர விழுதுகள் எப்போது மாணவர்கள் ஊஞ்சலில் விளையாடுவார்கள் என காத்து கிடக்கின்றன என்பது குறித்த செய்தி தொகுப்பினை காணலாம்.

நிலவின் தன்துருவத்தில் ஆய்வு செய்வதற்காகச் சந்திரயான் 2 என்ற விண்கலத்தைக்
கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டபோது சுற்றுப்பாதையை சென்றடைந்த போதிலும் தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கருவி தரையிறங்காமல் நிலவிலேயே மோதி சந்திராயன் செயலிழந்தது. சந்திரயான் 2 திட்டம் தோல்வியில் முடிந்தாலும் 615 கோடியில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்து விண்கலம் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்திலிருந்து இன்று ஏவப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இஸ்ரோ விஞ்ஞானியும் சந்திராயன் 3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேல் விழுப்புரம் நகர பகுதியான வ.உ. சி தெருவை சார்ந்த முன்னாள் ரயில்வே ஊழியர்
பழனிவேல் என்பவருக்கு மகனாகப் பிறந்து விழுப்புரம் ரயில் நிலையம் அருகில்
செயல்பட்டு வந்த ரயில்வே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.

ரயில்வே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து 342 மதிப்பெண் பெற்ற இவர்
விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரில் மெக்கானிக்கல் டிப்ளோமா பயின்று
சென்னையிலுள்ள பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்து ஐ ஐடி ஆராய்ச்சி
பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த
2014 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சந்திராயன் 2 ல் பணியாற்றி சந்திரான்
மூன்றின் திட்டையக்குனராக உள்ளார்.

சந்திராயன் 3 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில் வீரமுத்துவேல் பயின்ற ரயில்வே பள்ளி நூறு ஆண்டுகளை கடந்து இரண்டு ஆண்டுகளாக போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் மூடு விழா கண்டுள்ளது. ரயில்வே பள்ளியில் பயின்ற பல்பேர் காவல் துறை ரயில்வே துறை வீரமுத்துவேல் போன்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி உள்ளதால் மூடுவிழா கண்ட ரயில்வே பள்ளியை திறக்க வேண்டுமென முன்னாள் ரயில்வே பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சந்திராயன் 3 திட்ட இயக்குனரை உருவாக்கிய இப்பள்ளியை மீண்டும் திறக்க ரயில்வே பணியாளர் குழந்தைகள் மட்டுமல்லாது மற்ற மாணவர்களை விழுப்புரம் ரயில்வே பள்ளியில் சேர்த்து பள்ளியை திறக்க வேண்டுமென முன்னாள் மாணவர்களும் ரயில்வே ஊழியர்களும் தெரிவிக்கின்றனர். சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் இன்று ஏவப்பட்டதை முன்னிட்டு இடிக்கப்பட்ட ரயில்வே பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சந்திராயன் 3 திட்ட இயக்குனரை உருவாக்கிய விழுப்புரம் ரயில்வே பள்ளி இயற்கை சூழல் மிகுந்த ஆலமரங்களை கொண்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் ஆலம் விழுதில் எப்போது ஊஞ்சல் ஆடுவார்கள் என காத்துகிடக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy