நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது நிலவை சந்திரயான் 3 நெருங்குவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சமீபத்தில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 நிலவுக்கு அருகே 100 கிலோ மீட்டர் அணுக்கப் பாதைக்குள் செலுத்தும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு அடுத்த 7 நாள்களில் நிலவில் லேண்டர் கலன் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது. அதன் சுற்றுப்பாதை தொலைவை படிப்படியாக குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சந்திரயான் விணகலம் குறைந்தபட்சம் 150 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 177 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவின் நெருக்கமான பாதையில் பயணித்து வருகிறது. அதற்கு அடுத்தகட்டமாக நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான தூரத்தை 100 கி.மீ. ஆக குறைக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நிலவுக்கும், சந்திரயான் விண்கலத்திற்கும் இடையேயான தூரம் நான்கவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து உந்து கலனில் இருந்து லேண்டர் சாதனம் விடுவிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23- ஆம் தேதி நிலவில் அது தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.







