ஜூலை 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில்
ஜூலை 25-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், சென்னை நகரின் ஒருசில பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, இன்று 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, கடலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.