காற்றின் வேக மாறுபாடு : 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில்  கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வந்த…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில்  கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் வெப்பமும் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் ‘கோமுகி அணை 7 செ.மீ., சித்தம்பட்டி 6 செ.மீ., தனிமங்கலம், கும்பகோணம், காட்டுமயிலூர், மேட்டுப்பட்டி, தல்லாகுளம், கொடைக்கானல் பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.