இந்தியாவுக்கு எதிராக செய்திகளை வழங்கியதாக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இவற்றில் 7 யூடியூப் சேனல்கள் இந்தியாவையும் ஒரு சேனல் பாகிஸ்தானையும் சேர்ந்தவை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, பொது அமைதி உள்பட பலவற்றுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை வழங்கியதாக இந்த 8 யூடியூப் சேனல்கள் மீது மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சேனல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், அவற்றின் குற்றச் செயல் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021ன்படி இந்த 8 யூடியூப் சேனல்களும் முடக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், இந்த சேனல்களின் மொத்த பார்வை எண்ணிக்கை 114 கோடி என்றும், இவை 85.73 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 25ம் தேதி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் 16 யூடியூப் சேனல்களை முடக்கியது. இவற்றில் 10 சேனல்கள் இந்தியாவையும் 6 சானல்கள் பாகிஸ்தானையும் சேர்ந்தவை. அதன் பிறகு எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாக 8 யூடியூப் சேனல்களின் முடக்கம் பார்க்கப்படுகிறது.