30 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டு

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போனை திருடிய சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையம், டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் பயணிகள், பொதுமக்கள் கூட்டமாக இருப்பதை பயன்படுத்தி செல்போன், பணம் மற்றும் உடமைகள் திருடு போவது அவ்வப்போது தொடர்கதையாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அந்த வரிசையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித்திரிந்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் பதிலளித்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்கள் 2 பேரும் செல்போன்களை திருடி வந்தது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று போலீசார் பார்த்தபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த 47 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் எந்தெந்த பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டார்கள் எங்கு எல்லாம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் இவர்களது கூட்டாளிகள் எங்குள் உள்ளார்கள் என்பது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading