பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பி சுசீலா. 70 மற்றும் 80 களின் நடிகைகளான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ள படத்தில் அவர்களுக்காக பின்னணி பாடியுள்ளார்.
உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற “பால் போலவே” என்ற பாடலுக்காக முதன் முறையாக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார். வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் பாடுவதை பி. சுசீலா தவிர்த்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : #Kolkata பெண் மருத்துவர் கொலை : இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு புதிய திட்டம் – மே.வங்க அரசு ஆலோசனை!
சினிமாவில் பாடகியாக கொடி கட்டி பறந்தவர் பி. சுசீலா. இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் படமும் பெரிய வெற்றியை பெற்றது. இதன் காரணமாக, தங்களுக்கு இவர்தான் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் விருப்பப்பட்டனர். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பி. சுசீலா அனுமதிக்கப்பட்டுள்ளார்.







