அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி குறித்த செய்தியை வெளியிட்டதற்காக, நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி கைது செய்யப்பட்டனர். அப்போது நக்கீரன் கோபாலை, சந்திக்க சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 5 பேர் மீது, அனுமதி யின்றி போராட்டம் நடத்தியது, போக்குவரத்தை முடக்கியது ஆகிய பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எம்.எல்.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வைகோ உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.