கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

பஞ்சாபில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சர்துல்கரில் இருந்து பதிண்டா நோக்கி 45க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று நேற்று (டிச.27)…

பஞ்சாபில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சர்துல்கரில் இருந்து பதிண்டா நோக்கி 45க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று நேற்று (டிச.27) சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜிவான் சிங் வாலா என்ற கிராமத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து கால்வாயில் மூழ்கியது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்தில் இருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஊர் பொதுமக்களும் இணைந்து பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். இதில் விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயமடைந்தனர். உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனப்பி வைத்தனர். மோசமான வானிலையே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.