புத்த பூர்ணிமா – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

புத்தரின் பிறந்தநாளான இன்று புத்த பூர்ணிமா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து ஹெரிவித்துள்ளார். இது தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“புத்த பூர்ணிமாவின் புனிதமான நாளில், உலகெங்கிலும் உள்ள அனைத்து சக குடிமக்களுக்கும் பகவான் புத்தரின் சீடர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். பகவான் புத்தரால் அருளப்பட்ட அஹிம்சை, அன்பு மற்றும் கருணை ஆகியவற்றின் அழியாத செய்தி, இரக்கத்தின் உருவகம், மனிதகுலத்தின் நலனுக்கான அடிப்படை மந்திரமாகும்.

அவரது இலட்சியங்கள் சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியின் நித்திய மதிப்புகளில் நமது நம்பிக்கையை நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. அவரது போதனைகள் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை வாழ நம்மை ஊக்குவிக்கின்றன. பகவான் புத்தரின் கொள்கைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொண்டு, அமைதியான, இணக்கமான மற்றும் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதில் பங்களிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.