மதுரையில் செப்.2 முதல் 12ம் தேதி வரை புத்தக கண்காட்சி- மாவட்ட ஆட்சியர்

மதுரையில் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை புத்தக கண்காட்டி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள்…

மதுரையில் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை புத்தக கண்காட்டி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சாா்பில் கடந்த 2006 முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாக கொண்டு செல்லும் நோக்கில் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் கலை அரங்கத்தில் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.


இந்த புத்தக கண்காட்சியில் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் 200 புத்தக அங்காடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், புத்தக கண்காட்சியில் குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும்
விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் தினந்தோறும் வல்லுநர்களை கொண்டு மாலை வேளையில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.