வரும் தேர்தலில் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் கிடைப்பது உறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட பாஜக சார்பில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் கிடைப்பது உறுதி. 25 எம்பிகள் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு 5 கேபினெட் அமைச்சர்கள் போராடி பெற்று தருவது என்னுடைய பொறுப்பு என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பிகளால் தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யமுடியவில்லை என்றும், மீண்டும் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்கு ஆண்டுக்கு 24 விமான டிக்கெட், இலவச தொலைபேசி இணைப்பு, தவிர வேறு எதுவும் கிடைக்காது எனவும் அண்ணாமலை விமர்சித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெற
வைத்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.50 ஆயிரம் கோடி நலத் திட்டங்கள் கொண்டு
வரப்படும், தமிழக எம்.பி.க்கள் பேசினாலும் வேலை நடக்காது. எனவே வரக்கூடிய தேர்தலில் பாஜகவை ஆதரிக்க மக்கள் தயாராகிவிட்டன என்றும் அவர் கூறினார்.