வரும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி பேச்சுக்களும் ஆரம்பம் ஆகிவிட்டன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல், கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி, பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்மதம் தெரிவித்துள்ளார்.இதனை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியை தேவகவுடா சந்தித்து ஏற்கனவே 4 இடங்களை இறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத தனித்துப் போட்டியிட்டன. பாஜக, மஜத பிரிந்த நிலையில், காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.