கோவையில் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் ட்விட்டரில் அவதூறு பரப்பிய உமா கார்க்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து ஆபாசமாகவும், அவதூறாகவும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வந்ததாக பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவரது, சமூக வலைதள செயல்பாடுகளை பாராட்டி, சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மையில், தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்கினார்.
விழாவில் பேசிய விஜய் “அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என முக்கிய அறிவுரையை கூறினார். பெரியார் பற்றி படிக்க சொன்ன கருத்துக்கு தனது சமூக வலைதள பக்கத்தில், விஜய் பற்றி அவதூறு கருத்துக்களை உமா கார்க்கி வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர், புகாரின் அடிப்படையிலும், திமுக குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பியது மற்றும் மறைந்த முதல்வர் கருணாநிதி 200 கோடி லஞ்சம் பெற்றதாக ட்விட்டரில் பதிவிட்டது குறித்தும் பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சைபர் கிரைம் போலீசார் உமா கார்க்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.