34.8 C
Chennai
June 24, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”இந்திய ஒற்றுமை பயணத்தை காப்பியடித்துத்தான் பாஜக பாத யாத்திரை நடத்துகிறது “ – விஜய்வசந்த் எம்பி குற்றச்சாட்டு

”இந்திய ஒற்றுமை பயணத்தை காப்பியடித்துத்தான் பாஜக பாத யாத்திரை நடத்துகிறது “ என விஜய்வசந்த் எம்பி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம்
செய்ததை கண்டித்தும் ,வன்முறைகளை தடுக்க தவறிய மத்திய, மாநில BJP அரசுகளை
ராஜினாமா செய்ய கோரியும் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் கிழக்கு வட்டார
காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் பகுதியில் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி.உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட எம் பி விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் தெரிவித்ததாவது..

பாரத் ஜோடோ யாத்திரையை பார்த்து தான் பாஜகவினர் தற்போது யாத்திரை மேற்கொண்டு உள்ளனர். இது அரசியல் நோக்கத்தோடு வரும் பாராளுமன்ற தேர்தலை குறிக்கோளாய் வைத்து நடத்துகின்றனர்.இதனால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.

தமிழகத்தில் பாஜக அடியெடுத்து வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால்  அது வெறும் எண்ணமாக மட்டுமே இருக்கும்.ஏனென்றால் இங்கு காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. மக்களும் தெளிவாக உள்ளதால் பாஜகவுக்கு இங்கு வாய்ப்பு இல்லை” என விஜய் வசந்த் எம்பி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading