“பிகினியோ, முக்காடோ, ஹிஜாபோ… அது பெண்ணின் உரிமை” – பிரியங்கா காந்தி

“பிகினியோ, முக்காடோ, ஹிஜாபோ எதை அணிவது என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமை” என பிரியங்கா காந்தி டிவிட்டரில் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு…

“பிகினியோ, முக்காடோ, ஹிஜாபோ எதை அணிவது என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமை” என பிரியங்கா காந்தி டிவிட்டரில் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உடுப்பியில் உள்ள பல்கலைக்கழக அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப்பை எடுத்துவிட்டு வகுப்பறைக்குள் அமர வேண்டும் என நிர்வாகம் திடிரென பிறப்பித்த புதிய உத்தரவை மாணவிகள் நிராகரித்தனர்.

மாணவிகளின் மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்பறைக்குள் வந்தனர். இது அடுத்தடுத்து மிகப்பெரிய போராட்டமாக உருவானது. இந்நிலையில், நேற்று இரு தரப்பு மாணவர்களுக்குமிடையே மோதல் உருவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கிக்கொண்டனர்.

இதன் காரணமாக தாவணகெரே மாவட்டம் ஹரிகரா, சிவமொக்கா மாவட்டத்தில் சிவமொக்கா நகர், சிகாரிப்புரா, உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா, மணிப்பால் ஆகிய பகுதிகளில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாணவிகளுக்கு ஆதரவாகும், எதிரப்பாகவும் பலர் தங்கள் கருத்துக்களை பகிர தொடங்கினர்.

இந்நிலையில், “பிகினியோ, முக்காடோ, ஜீன்ஸோ அல்லது ஹிஜாபோ எதை அணிவது என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமை” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/priyankagandhi/status/1491266789179011075

மேலும், எதை அணிய வேண்டும் என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது என்றும், பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்துதான் வர வேண்டும் என்று மாநில அரசு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று (பிப்.8) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரானை இன்றும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.