புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது மிகப்பெரிய தவறு என்று மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு, நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழனுக்காக பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக மாலை முரசு நாளிதழை தொடங்கினார்; அதன் பின்னர் தினத்தந்தி பத்திரிகையை தொடங்கினார்.
ஈழமண்ணில் இன்னும் உணர்வு இருந்து கொண்டு தான் இருக்கிறது அந்த உணர்வு சாகாது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உலக நாடுகளில் ஆதரவு பெருகுவது தடுக்க முடியாத ஒன்றாகிறது.
மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை மட்டும் வைக்கவில்லை; தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு எனது கிராமத்தில் எனது தாயார் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற வரை சென்று எங்களது ஊரில் டாஸ்மாக் கடை இருக்க கூடாது என தீர்ப்பு பெற்று வந்துள்ளோம். தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை குறைக்க போவதாக அறிவித்திருக்கிறது.
கள்ளச்சாராயம் முன்பிருந்த ஆட்சி காலத்தில் தான் பெருகி ஓடியது. அந்த விளைவுகளை தான் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு. பிரதமர் அந்த கட்டடத்தை திறந்தால் அது அரசியல் ஆகிவிடும்.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.