பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் 132-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல, பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
என்று திரைப்படத் துறையின் சில குறைகளை தனது பேனாவால் விமர்சித்து வெளிச்சம் போட்டுக் காட்டினார் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், திரைப்படத் துறையை அவர் கைவிட்டாலும் பாரதிதாசனை திரைப்படத் துறை கைவிடவில்லை. தமிழ்பற்றும், வீரஞ்செறிந்த தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளும் நிறைந்த பாரதிதாசன் பாடல்களை தமிழ்திரையுலகம் பயன்படுத்திக் கொண்டது. ரசிகர்களை வீறு கொண்டு எழ வைத்தது.
பாவேந்தர் பாரதிதாசன் தனது வரிகளில் எல்லாம் தமிழுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தார்.
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
என்ற வரிகள் பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில் இடம்பெற்று பட்டி தொட்டியெங்கும் மணம் வீசியது.
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்
அண்மைச் செய்தி: ‘ தெற்கு ரயில்வேக்கு 2 லட்சம் அபராதம்; நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி’
என தீமைக்கு எதிராக போராட தூண்டி காகிதத்தில் கவிதை வடித்தார் பாரதிதாசன். அந்தப் பாடலே பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன், வாணி ஜெயராம் குரலில் ஒளித்ததோடு, அதில் இடம் பெற்ற வரிகளைப் போலவே அறிஞர் தம் இதய ஓடையெங்கும் நிறைந்து ஓடியது.
கொலைவாளினை எடடா மிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
எனவும் அந்தக் கவிதையில் கர்ஜித்தார் பாரதிதாசன்… அந்த வரிகளே மணிமகுடம் திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் குரலில் ஒலித்து கேட்போரை கிளர்ந்தெழச் செய்தது. காகிதங்களில் மட்டுமின்றி கனவுத் தொழிற்சாலையான திரைப்படங்களிலும் ஒளித்து சிறந்த பாரதிதாசனின் வரிகள், இன்று கேட்கும்போதும் புதிதாய் இனிக்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.