கிருஷ்ணகிரியில் அக்னி வசந்த மகோற்சவ விழாவையொட்டி திரௌபதி
அம்மன் கோயிலில், துரியோதனனை வதம் செய்த படுகளப்போர்
நிகழ்வு நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் ஏழு கிராமங்களுக்கு சொந்தமான ஸ்ரீதிரொபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவிலில் , ஆண்டுத் தோறும் அக்னி வசந்த மகோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெகுசிறப்பக அக்னி வசந்த மகோற்சவ திருவிழா , கடந்த மாதம் 26-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.
இக்கோயிலில், கிருஷ்ணகிரி பழையப்பேட்டை ஸ்ரீ செல்வநாடக சபா குழுவினரின்
கிருஷ்ணன் பிறப்பு, பாண்டவர் பிறப்பு, ஆரக்கு மாளிகை மற்றும் சுபத்திரா
திருமணம் உள்ளிட்ட பல்வேறு இதிகாச, மகாபாரத மற்றும் தெருக்கூத்து கலை
நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்கவாக துரியோதனன்
படுகளப்போர் திரெளபதி அம்மன் கோவிலின் எதிரே நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் 30 அடி நீளத்திற்கு துரியோதனன் உருவ பொம்மை மண்ணால் உருவாக்கப்பட்டது.
இதில் பீமனும், அர்ச்சுனனும் போரிடும் காட்சிகள் நடத்தப்பட்டது. இறுதியில் அர்ச்சுனன்
போர் வாலால் துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. தொடர்ந்து, திரெளபதி அம்மன் சபதம் நிறைவேறும் வகையில் , திரெளபதி கூந்தல் முடிக்கும் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வினை மக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். பின்னர், விழாவில்
கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் துடைப்பத்தினால் தலையில்
அடிவாங்கி , தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும், திரொபதி அம்மனை
தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
—கு.பாலமுருகன்