B.Plan., (இளநிலை திட்டமிடல்) என்ற 5 ஆண்டு புதிய பாடத்திட்டம் இந்த கல்வி
ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், கட்டிடக்கலை
மற்றும் திட்டமிடல் கல்விக்கு (SAP) நிதியுதவிக்காக ரூ. 10 கோடி ஒதுக்கப்படும்
என்று அறிவித்திருந்தார். அதன்படி 80:20 என்ற விகிதத்தில் CMDA மற்றும் DTCP வழங்கும் B.Plan பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநிலத்தில் நகர்ப்புறத் திட்டமிடல் திறனை வலுப்படுத்த, வீட்டு வசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சித் துறை HUDD, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் CMDA
மற்றும் நகர் ஊரமைப்புத் துறை DTCP, உயர் கல்வித் துறை மற்றும் கட்டிடக்கலை
மற்றும் திட்டமிடல் துறையுடன் இணைந்து, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள சில நிறுவனங்களில் B.Plan பாடத்திட்டம்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 5 ஆண்டு இளநிலைத் திட்டமிடல் படிப்பு செப்டம்பர் 2022 முதல் இந்த கல்வியாண்டில் தொடங்கப்படும் எனவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது சேர்க்கை போர்ட்டலில் ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 1 முதல் 2 ஆண்டுகள் வரை திட்டமிடல் படிப்பு தொடர்பான
முதுநிலை பாடத்திட்டம் ( M.Plan., ) மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஆழமான நிபுணத்துவம் இல்லாமல், அனைத்து திட்டமிடல் கருத்துகளையும் அறிமுகப்படுத்துவதற்கு மட்டுமே இந்த பாட காலம் போதுமானதாக உள்ளது. ஆனால், திட்டமிடலில் 5 வருட இளநிலைப் படிப்பின் மூலம் நகர்ப்புறத் திட்டமிடல் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சிறந்த திட்டமிடல் மாணவர்களை உருவாக்க முடியும். திட்டமிடலில் முதுநிலை பட்டங்கள் பெற்ற பின்னர் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தில் மேலும் நிபுணத்துவம் பெற உதவும், அவர்கள் சந்தையில் வேலைகளைப் பெறுவதையும் உறுதிசெய்யும்.
நகர்ப்புற திட்டமிடல் என்பது, நகரங்களைப் பற்றிய ஒரு ஆய்வு ஆகும். தற்போதுள்ள நகரமயமாக்கல் செயல்முறை, போக்குவரத்து, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற நகரங்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் காரணிகள் மற்றும் புதிய மற்றும் இருக்கும் நகரங்களை நிலையான முறையில் மேம்படுத்துவதற்கான வழிகள். சமூகவியல், ரியல் எஸ்டேட், வீட்டு வசதி, உள்கட்டமைப்பு திட்டமிடல், போக்குவரத்து, சூழல்கள் போன்ற சிக்கலான கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கு மாணவர்களை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்கள் நகர்ப்புற மையங்களை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் மற்றும் நகர்ப்புற சமூகம் மற்றும் சுற்றுச்சூழலின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது குறித்தும் திட்டமிடுவது ஆகும்.
நகர்ப்புற திட்டமிடலுக்கான வேலை வாய்ப்புகள் இன்று இளைஞர்களுக்கு வலுவாக உள்ளன. நகர்ப்புற திட்டமிடல் என்பது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ STEM
பட்டியலின் ஒரு பகுதியாகும், மேலும், இது மற்ற தொழில்களைப் போலவே 7%
வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், நகர்ப்புறத் திட்டமிடல் தனியார் மற்றும் பொதுத் துறையில் பணிபுரியும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி மிஷன் போன்ற திட்டங்கள், எதிர்கால நகரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது, திட்டமிடுபவர்களுக்கு வேலை செய்வதற்கான வாய்ப்புகளை மேலும் வழங்கி உள்ளது.
-ம.பவித்ரா