தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கலையொட்டி, வீரர்களின் உறுதிமொழியோடு தொடங்கியது. 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் களம் காண்கின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போட்டியில் சீறி வரும் காளைகளை அடக்க முதல் சுற்றுக்கு 50 வீரர்கள் மஞ்சள் நிற டீ சர்ட் அணிந்து களம் இறங்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.