சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரையில் மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ ரூ.2300-க்கு விற்பனையாகிறது.
மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக மல்லிகை பூவின் விலை கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சம்பங்கி, பிச்சி, முல்லை உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் சற்று குறைவாகவே இருந்த நிலையில் தற்போது அதன் விலையும் அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தென் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பூவரத்து கணிசமான அளவு குறைந்துள்ளது. இதனால் பூவின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ள நிலையில், நாளை சுபமுகூர்த்த நாள் என்பதால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூவானது ரூ.2300-க்கு விற்பனையாகிறது.
இந்த நிலையில் நாளை சுப முகூர்த்த நிகழ்வு என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ 1கிலோ 2300 க்கும், பிச்சிப்பூ 1கிலோ 700 க்கும், முல்லைப்பூ 1கிலோ 800 ரூபாய்க்கும், சம்பங்கி 1கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.