முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக கூட்டணியில் அதிக இடங்கள் கேட்போம்: கே.எஸ்.அழகிரி தகவல்!

புதுச்சேரியில் ஆளுநர் மூலம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தேர்தல் தேதி அறிவித்ததும் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை செயல்படாமல் தடுக்க கிரண்பேடியை மோடி அனுப்பி இருந்ததாகவும் தற்போது ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பி உள்ளார் என்று விமர்சித்த அழகிரி, இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

மோடிக்கு பொருளதாரம் தெரியாததால் தவறாக வரி விதிப்பின் முலம் வழிநடத்துகிறார். மக்களுக்கு பொய்யான தகவலை தருகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும். பாஜகவில் நடிக்க ஆட்கள் இல்லாததால் நடிகர், நடிகைகளை சேர்க்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

4 பேருடன் ரயில் மறியல் : கே எஸ் அழகிரி விளக்கம்

Web Editor

திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளது: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

Arivazhagan Chinnasamy

என்னது பிரியாணி சமோசாவா? – நீங்க உணவு பிரியரா இருந்தா மிஸ் பண்ணாதீங்க…

Web Editor