ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. 6 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), ஆப்கானிஸ்தான், இலங்கை (பி பிரிவு) அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் சுற்றிலேயே ஹாங்காங், வங்காளதேசம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் பேன்ற அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சூப்பர்4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது. சூப்பர்4 சுற்றில் இலங்கை அணி 3 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்து 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தும், பாகிஸ்தான் அணி (2 வெற்றி, ஒரு தோல்வி) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியன் இந்தியா (ஒரு வெற்றி, 2 தோல்வி) 2 புள்ளியுடன் 3-வது இடமும், 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தன.
இதையடுத்து இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோரும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.