தமிழ்நாடு அனைத்து விவசாய பொதுக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொழுப்பேட்டை சுங்கசாவடி அருகே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க சென்றபோது செங்கல்பட்டு மாவட்ட எல்லையான தொழுப்பேடு சுங்கச்சாவடியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் பி ஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பல்வேறு போராட்டங்களைச் சந்தித்துள்ளது. காவல்துறையின் அடக்குமுறையால் மக்கள் எழுச்சிப் போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. அமைதியான வழியில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு உரிமை உள்ள நிலையில் அவர்களை அடக்குவது ஜனநாயக விரோதமான செயலாகும்.
இத்திட்டமானது இன்னும் துவக்க நிலையில்தான் உள்ளது. இத்திட்டத்திற்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்து அனுமதிகளைப் பெற வேண்டுமென்று சட்டம் கூறுகிறது. அந்நடைமுறைகளில் பொதுமக்கள் கருத்துக் கேட்பும் ஒன்றாகும். பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி இத்திட்டத்தை கொண்டுவந்தே தீருவோம் எனும் நோக்கில் திட்டத்திற்கு எதிரான கருத்துகளையும் போராட்டங்களையும் ஒடுக்க நினைப்பது ஜனநாயக விரோதமாகும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்ட பி.ஆர்.பாண்டியன் அவர்களை உடனடியாக விடுவிக்க காவல்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பாக கோரிக்கை வைத்தனர்.