ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத மோதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த ஜூம் மோப்ப நாய்க்கு, ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக், கோகர்நாக்கில், தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது, களத்தில் இருந்த ஜூம் என்ற ராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய் அந்த சண்டையில் இடம் பெற்றிருந்தது. அதில், தீவிரவாதிகளை அடையாளம் காட்டி அவர்களை பாய்ந்து பிடித்து துணிச்சலாக உதவியபோது, தீவிரவாதிகள் ஜும்மை துப்பாக்கியால் சுட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் இரண்டு தோட்டாக்கள் ஜூம் மீது பாய்ந்ததால், அது பலத்த காயமடைந்தது. பின்னர் ஜூம், ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென உயிரிழந்தது. சண்டையின் போது ஜூம் பாய்ந்து பிடித்து தீவிரவாதிகளை தடுக்கும் வீடியோவை ராணுவ அதிகாரிகள் வெளியிட்டநிலையில், அது வைரலானது.
இந்நிலையில், உயிரிழந்த ஜூம் மோப்ப நாய்க்கு ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். ஜூம்மின் உடலை வைத்திருக்கும் பெட்டி மீது ராணுவ அதிகாரிகள் அணிவகுப்பாக வந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இது தொடர்பான வீடியோவை சினார் காப்ஸ் வெளியிட்டுள்ளது.
-இரா.நம்பிராஜன்