நயன்தாரா-விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருநங்கைகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதில் தேசிய மருத்துவ ஆணையம் சில விளக்கங்கள் கேட்டு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்றார்.
அதுகுறித்து மருத்துவத்துறை வல்லுனர்கள், மருத்துவர்கள் போன்ற குழுவினருடன் ஆலோசித்தும், திருநங்கைகள் அமைப்பினரையும் இணைந்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என கூறினார். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவததை தடுப்பதற்கு தாழ்வான பகுதியில் மருத்துவமனை உள்ளதா என்பதை கண்டறிவது சுகாதாரத் துறை பணி அல்ல அது பொதுப்பணிதுறையின் பணி இருந்தாலும், அதை கண்டறிய பொதுப்பணி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகினார்கள் என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது என்றும் இதுதொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரனண நடைபெற்று வருகிறது. இதில் யார் தவறு செய்துள்ளார்கள், சட்டம் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பதை கண்டறிந்து ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.








