அரக்கோணத்தில் காவல்துறை சார்பில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சக்தியன் தலைமையில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரக்கோணம் டிவிஷனில் உள்ள அனைத்து பெட்டிக்கடை உரிமையாளர்களும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்களிடம் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை விற்றாலோ அதற்கு துணை நின்றாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அவர்களது வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் போதைப் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம், விற்பதற்கு துணை நிற்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஏ டி எஸ் பி விசுவேசுவரய்யா மற்றும் அரக்கோணம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரபு, அரக்கோணம் டிவிஷனில் உள்ள அனைத்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
போதை பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நியூஸ் 7 தமிழ் சார்பாக முதன்முதலில் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ச்சியாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்