பாடல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் உயிர் தப்பியுள்ளார். இதுதொடர்பான தகவலை ஏ.ஆர்.அமீன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் இசைகலைஞராக உள்ளார். ‘ஓ காதல் கண்மனி’ படத்தின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். யுவன் சங்கர் ராஜா இசையிலும் அவர் பாடியுள்ளார். அவ்வப்போது, ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.அமீன் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அதிர்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.அமீன் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் பாடலுக்காக நடத்தப்பட்ட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்த புகைப்படங்களை அமீன் பகிர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டு தினங்களுக்கு முன்பு பாடல் படப்பிடிப்பு நடந்த போது படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த செட்டும், அலங்கார விளக்குகளும் அறுந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில் தான் நூலிழையில் தப்பியதாக அமீன் பகிர்ந்துள்ளார்.
அண்மைச் செய்தி :கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிறப்புகள் என்னென்ன?
இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.அமீன்,” இன்று பாதுகாப்பாகவும், உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஆன்மிக குருமார்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.