28.3 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மேல்முறையீடு சம்பந்தப்பட்ட வழக்கு-ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

மேல் முறையீடு சம்பந்தபட்ட வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த 17 ம் தேதி அன்று நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்கள் அழைத்த உத்தரவின் பெயரில் எடப்பாடி அவர்கள் மேல்முறையீட்டு செய்து விசாரணை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை எடுத்துரைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அனைத்து தரப்பின் வாதங்களையும் எடுத்து வைத்து நாளை மதியம் 3 மணிக்குள்
அனைத்து தரப்பின் வாதங்களின் எழுத்துப்பூர்வமாக சமத்துக்குமாறு கூறியுள்ளார்.

இன்றைய தினம் நடந்த மேல்முறையீடு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின்
தரப்பில் தனி நீதிபதி முன்பு எடுத்து வைத்த வாதமானது இரண்டு பதவியும் காலாவதி
ஆகிவிட்டது. 23,  2022 அன்று இந்தத் தீர்மானம் வைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல்
கிடைக்கவில்லை. ஆகையால் இந்த இரண்டு பதவிகளும் காலாவதியாகிவிட்டது என்று தனி நீதிபதி முன்பு எடுத்துரைத்தார்கள்,

ஆனால் இன்று இதுபோன்ற ஒரு வாதத்தை அவர்கள் தரப்பில் இன்று எடுத்துரைக்கவில்லை. இதுதான் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் 01.07. 2022 அன்று தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழு கூட்டுவதற்கான கடிதம் அனுப்பியது செல்லாது என்பதுதான் எங்களது வாதம்.

நீதிபதி உத்தரவில் இந்த இரண்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை
ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை எடுத்து நடத்தலாம் என சுட்டிக்காட்டி உள்ளார்.
இதை முக்கியமான வாதமாக முன் வைத்தோம்.

நிச்சயமாக சட்டத்தின் விதிகள், நியாயத்தின் பக்கம் நிச்சயமாக வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கிறோம். இதே வரி சேர்க்கும் ஆவணங்களை தனி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

ஏற்கனவே எடுத்துரைத்த வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பானது அளிக்கப்பட்டது. இந்த
வழக்கிற்கு புதிதாக இதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. எங்கள் தரப்பு வலுவாக
இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இன்று இந்த இரண்டு நீதிபதிகள் முன்பு எடுத்து வைத்த வாதங்களை எழுத்துப்பூர்வமாக
அளிக்க உள்ளோம். தேவையான தீர்ப்பு கேட்க ஆவணங்களை நாங்கள் சமர்ப்பிப்போம்.

தொண்டர்களுடைய கருத்தை அவர்கள் பிரதிபலிக்காமல் விட்டு விட்டார்கள். அவர்கள்
ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார்கள் என்பது எனது கருத்து. நிச்சயமாக இரு நீதிபதிகளை நம்பர்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு வெற்றியை தரும் என நம்புகிறோம் என்றார் திருமாறன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading