மாங்காட்டில் மழைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்காக பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாங்காட்டில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபோது அதில் ஒருவர் முகம் குப்புற கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் இறந்து போனது தெரியவந்தது. இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் தெரிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாங்காடு பாலாண்டீஸ்வரர் தெருவை சேர்ந்த லட்சுமிபதி (42), என்பதும் டிரைவராக வேலை செய்து கொண்டு வந்தது தெரியவந்தது.
இன்று காலை வேலை முடித்து விட்டு வந்தவர் நிலை தடுமாறி கால்வாய்க்காக தோண்டப்பட்டு இருந்த 3 அடி பள்ளத்தில் தேங்கி இருந்த மழைநீரில் தலை குப்புற விழுந்தவர் எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாங்காடு நகராட்சியில் நடைபெறும் மழை நீர் கால்வாய்க்கான பணிகளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யாமல் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏதும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மாங்காடு நகரத்தில், பணிகள் முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து லட்சுமிபதி என்ற தனியார் நிறுவன ஊழியர் இன்று காலை உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.(1/4)
— Dr S RAMADOSS (@drramadoss) November 10, 2022
இதற்கு பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், தோண்டப்பட்ட மழை நீர் வடிகால் பள்ளங்கள் மூடப்படாததால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் அல்லது பள்ளங்கள் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து எச்சரித்தும் கூட அலட்சியம் தொடர்வது சரியல்ல.
பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் தடுப்பரண்களை வைப்பது மட்டுமே பாதுகாப்பு அல்ல. உடனடியாக முடிக்க வாய்ப்புள்ள பணிகளை மழையில்லாத நாள்களில் நிறைவு செய்ய வேண்டும். அத்தகைய வாய்ப்பில்லாத மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.