காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.கான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் அண்மையில் விலகிய நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.கான் தற்போது காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏம்.ஏ.கான் தெலங்கானாவைச் சேர்ந்தவர். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர். சிறுபான்மையினர் ஆதரவு பெற்றவர். இந்நிலையில் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கட்சியின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமே காரணம் என்று கூறியிருந்த நிலையில், எம்.ஏ.கானும் ராகுல்காந்தி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த எம்.ஏ.கான், கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏனென்றால் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்தத் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி தலைமையில் கட்சி இயங்கியதோ அதேபோன்று இப்போது கட்சியை இயக்கும் தலைவர்கள் இல்லை என வேதனை தெரிவித்துள்ளார். இதனால்தான் கட்சி நடவடிக்கைகளில் தான் பங்கேற்பதை நிறுத்திக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஆகையால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் தான் ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து மற்றொரு தலைவர் கட்சியில் இருந்து விலகியிருப்பது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்