32.4 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி!

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வின்படி,  இளங்கலை படிப்புகளுக்கான செய்முறை,  எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில்,  50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதே போன்று இளங்கலை ப்ராஜெக்ட் தீசிஸ் தேர்வுக்கான கட்டணம் ரூ.300 இல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதுகலை செய்முறை மற்றும் அனைத்து எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.450 இல் இருந்து ரூ.650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  அதேபோன்று முதுகலை ப்ராஜெக்ட்டின் ஒவ்வொரு நிலைக்கும் கட்டண் ரூ.600 இல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக் கட்டணத்துடன் சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.  அதாவது, இளங்கலை, முதுகலை மதிப்பெண் சான்றிதழ்,  தற்காலிக சான்றிதழ்,  இளங்கலை பட்டம் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகளின் கட்டணமும் ரூ.1,500 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த கட்டண உயர்வுகளுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதையடுத்து 50 சதவிகித தேர்வுக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading