புதுச்சேரியில் வெகுவிமரிசையாக நடைபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம்!

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஸ்ரீதாண்டவேஸ்வருக்கும் – ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஸ்ரீதாண்டவேஸ்வருக்கும் – ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் நடைபெற்ற
திருக்கல்யாண உற்சவத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி, சண்முகாபுரம் பகுதியில் உள்ள அன்னை சோனியாகாந்தி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயி உள்ளது.  இக்கோயிலில் 11-ஆம் ஆண்டு மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் இக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக கோயில் வளாகத்தில் ஸ்ரீதாண்டவேஸ்வருக்கும் – ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
அம்மனுக்கும் பல்வேறு வண்ண ஆபரணங்கள் அணிவித்து, மாலை மாற்றுதல் உள்ளிட்ட
நிகழ்ச்சிகள் நடைபெற்றது.   தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  பின்னர்
மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.