27.2 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்த விழா மும்பையில் அம்பானியின் அண்டிலியா வீட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானி என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்டின் மகளான ராதிகா மெர்ச்சென்ட் என்பவரை விரைவில் மணக்கவுள்ளார். ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்ச்ன்ட் ஆகிய இருவரும் நேற்றைய நிகழ்ச்சியில் மோதிரம் மாற்றி  நிச்சயித்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிச்சயதாரத்த நிகழ்ச்சி குஜராத்தைச் சேர்ந்த இந்துக்கள் கடைபிடிக்கப்படும் கோல் தானா மற்றும் சுனரி விதி போன்ற சடங்குகளுடன் நடைபெற்றது. திருமனத்துக்கு முந்தைய கோல் தானா சடங்கில் வெல்லம் மற்றும் கொத்தமல்லி விதைகள் பறிமாறி கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து சுனரி விதி சடங்கு  நடந்தது.

அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தற்போது என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading