முதுமலை வனப்பகுதியில் ரோந்து வாகனத்தை மறைந்திருந்து நொடிப்பொழுதில் விரட்ட முயன்ற யானையை, பதற்றத்துடன் கண்டு ரசித்தவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. இங்குள்ள வனவிலங்குகளை கண்டு ரசிக்க முதுமலை புலிகள் காப்பகத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க வனத்துறை சார்பில் வனப்பகுதிக்குள் வாகன ரோந்து அழைத்து செல்வது வழக்கம். அதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் ரோந்து வாகனம் மூலம் அடர்ந்த வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றனர்.
அப்போது வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டு யானை சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை கண்டதும் மரத்தின் பின் மறைந்து நின்றபடி நொடி பொழுது நேரத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை தாக்க முயன்றது. இதனைக் கண்ட வாகன ஓட்டுநர் ரோந்து வாகனத்தை வேகமாக இயக்கினார்.
இதனிடையே ரோந்து வாகனத்தை காட்டு யானை திடீரென தாக்கம் முயல்வதை சற்றும் எதிர்பார்க்காத சுற்றுலாப் பயணிகள் பதற்றத்துடன் கண்டு ரசித்தோடு மட்டுமல்லாமல் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.