அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டியில் போராடி தோல்வி அடைந்த போபண்ணா ஜோடி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி போராடி தோல்வி அடைந்தது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி போராடி தோல்வி அடைந்தது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பெரி ஜோடியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்தது.

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க ம் வீரர் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.