தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச்செயலாளர்கள் கவனிக்கும் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் 4ஆம் தனிச்செயலாளராக இருந்த அனு ஜார்ஜ்க்கு ஒதுக்கப்பட்டிருந்த துறைகள், 3 தனிச்செயலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயசந்திரனுக்கு, ஏற்கனவே கவனித்து வந்த 11 துறைகளுடன் சுற்றுச்சூழல், இளைஞர் நலன், சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உமாநாத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில், ஆதிதிராவிடர், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
3ஆம் தனிச்செயலாளரான சண்முகத்திற்கு கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதலமைச்சரின் நிகழ்வுகளை திட்டமிடுதல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.