நடப்பு ஆண்டில் 2 ஏ 350 விமானங்களை சேவையில் இணைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
டாடா குழுமத்தால் செயல்படுத்தப்பட்டும் வரும ஏர் இந்தியா தனது சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 470 விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதில் இரண்டு ஏ 350 விமானங்களைச் சேர்ப்பதற்கான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (டி.ஜி.சி.ஏ) ஒப்புதல் கடிதம் ஏர் இந்தியா பெற்றுள்ளது.
இந்த இரண்டு விமானங்களும் ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களால் இயக்கப்படும். அதே வேளையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், ஏர் இந்தியா-விடம் மொத்தம் ஆறு ஏ350 விமானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 2024 க்குள் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் நவீன இருக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கும் என ஏர் இந்தியா தலைவர் காம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.







