கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முரளியை ஆதரித்து அதிமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி பிரச்சாரம் மேற்கொண்டார் . அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக வேட்பாளர் முரளியை ஆதரித்து அதிமுக பிரச்சாரம் மேற்கொள்ளவது மகிழ்ச்சியாக உள்ளது. 2024 இல் நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி வரவேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனநிலையில் வேர் ஊன்றி இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய சட்டமன்ற தேர்தலில் கர்நாடக மக்கள் மிகப்பெரிய வெற்றி தருவார்கள் என நம்பிக்கையுடன் நிற்கிறோம்
தேர்தலுக்கு முன்பாக வரக்கூடிய கருத்துக்கணிப்புகள் பொய்யாக்கப்பட்டுள்ளன. அதில் கர்நாடக மாநிலமும் விதிவிலக்கல்ல. கருத்துக்கணிப்புகள் நிச்சயமாக பொய்யாக்கி பாஜக ஆட்சியை பிடிக்கும். கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும்.
ஒரு நாட்டின் பிரதமர் தன் கட்சிக்காக 7 நாட்கள் தங்கி மாநிலத்தை பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்றால் அவர் கட்சிக்காக எவ்வளவு அர்பணிப்புடன் இருக்கிறார் என்பதையும் நாட்டு மக்களுக்காக உழைக்கிறார் என்பதையும் பாருங்கள். ஒவ்வொரு கட்சியும் தங்களது வெற்றிக்காக தேர்தல் நேரங்களில் வாக்குறுதிகளை தருகிறார்கள். அந்த வகையில் இங்கு இருக்க கூடிய கட்சிகள் தமிழ்நாட்டைப் போலவே வாக்குறுதிகளை தருகின்றன” என தெரிவித்தார்.
தி கேரளா ஸ்டோரி என்ற படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ அந்தந்த மாநிலத்தின் கொள்கை முடிவுக்கு ஏற்றவாறு அது முடிவு செய்து கொள்ள வேண்டும் ” என கேபி முனுசாமி தெரிவித்தார்.