அதிமுக ஆட்சியில் மழை நீர் வடிகால் அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளையும் வழங்கினார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்
இதைத் தொடர்ந்து கொளத்தூரில் மருத்துவ முகாமை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியின்போது மழைநீர் வடிகால் அமைப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் எழுந்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி என்ன ஆனது என கேள்வி எழுப்பிய முதலமைச்சர், ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.