அதிமுக – பாஜக இடையேயான இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் மற்றும் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2 நாட்களாக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாஜக ஆலோசனை நடத்திய நிலையில், இன்று அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, இடப்பங்கீடு தொடர்பாக எந்த சிக்கலும் இல்லாமல் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகக் கூறினார்.
அதிமுக வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவதாக தெரிவித்த அண்ணாமலை, இது முதற்கட்ட பேச்சுவார்த்தை என்றும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறினார். மேலும், ஆளுநர் குறித்து முரசொலியில் அவதூறாக எழுதப்பட்டிருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.