வேளாண் துறையில் இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க ஊக்குவிக்கும் வகையில் புதிதாக ஊக்க நிதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2023- 2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண்துறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது வேளாண்துறையில் இளம் தொழில் அதிபர்கள் உருவாவதை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் ஊக்குவிப்பு நிதி ஒன்று ஏற்படுத்தப்படும் என அப்போது அவர் அறிவித்தார். வேளாண் பொருட்கள் விநியோக சங்கலித் தொடரில் உள்ள சிக்கலை தீர்க்க இந்த ஊக்க நிதி உதவும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் வரை விவசாய கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில விவசாயிகளுக்கான சிறப்பு திட்டமாக, கர்நாடகாவில் வறட்சிக்கான நிதியாக 300 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் கர்நாடக மாநில பாசன திட்டங்களுக்கு 5300 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அப்போது தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.