திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிலை திருட்டு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாடு கோவில் சிலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழா கொடியேற்றம் நடந்த பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக ஒற்றுமையுடன் கொண்டாட முதல்வர் தளபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அண்மைச் செய்தி : ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் இழப்பு – மேலும் ஒருவர் உயிரிழப்பு
20 மாத ஆட்சியில் 430 திரு கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. 2400 கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 2500 கிராமப்புற கோவில்களுக்கு ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் சிலை திருட்டு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தமிழ் நாடு கோவில் சிலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.







