ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் அள்ளிச் சென்றனா்.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மேகம் இருண்டு இன்று பரவலாக மழை பெய்து சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உத்தனபள்ளி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் ஆர்வமுடன் பொதுமக்கள் பாத்திரத்தில் அள்ளிச் சென்றனர்.
—ரூபி








