சி.வி.சண்முகத்தை அதிமுக-விலிருந்து நீக்குவார்களா என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததாகவும், தேர்தலில் தோல்வியை சந்தித்ததாகவும் பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கூட்டணியில் இடம்பெற்ற பாமகவை விமர்சித்து பேசியதற்காக தன்னை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கியதைப் போல் சி.வி.சண்முகத்தை அதிமுக-விலிருந்து நீக்குவார்களா என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.







