காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின், முழுமையான விளம்பரத்தில் நாட்டின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் படம் இடம்பெறாதது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 3 நாட்கள் நடைபெற்றது. 3-வது நாள் நிகழ்ச்சி குறித்து, பல்வேறு மொழி நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், கடந்த கால காங்கிரஸ் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் சரோஜினி நாயுடு ஆகிய 10 பேரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் நாட்டின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் படம் இடம்பெறவில்லை. இதற்கு காங்கிரஸில் உள்ள பல முஸ்லீம் தலைவர்கள் கட்சியை கடுமையாக சாடியுள்ளனர் . இது தொடர்பாக சமூக ஊடகங்களில் புறக்கணிப்பு ட்ரோல் செய்யப்பட்ட பிறகு, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் மூலம் மன்னிப்பு கேட்டார். ஜெய்ராம் ரமேஷின் அந்த மன்னிப்பு ட்விட்டல் ‘காங்கிரஸ் கட்சியின் மாநாட்டு விளம்பரத்தில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் படம் இடம்பெறாததற்கு கட்சி மன்னிப்பு கோருகிறது. ‘அதேநேரத்தில், “மன்னிக்க முடியாத சறுக்கல்”. அதற்கான பொறுப்பு சரி செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறியிருந்தார்.
மௌலானா அபுல் கலாம் ஆசாத், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் சிறைகளில் இருந்தவர், இரண்டு முறை காங்கிரஸின் தலைவராக இருந்தவர். இரு தேசக் கொள்கையை எதிர்த்த அவர், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரானார்.
அப்பேற்பட்ட தலைவரின் படம் இடம்பெறாதது மன்னிக்க முடியாத தவறு என்று மும்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆசிப் ஃபரூக்கி கூறியுள்ளார். மேலும் “காங்கிரஸின் 137 ஆண்டு கால வரலாற்றில் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்திற்கான விளம்பரத்தை அங்கீகரித்தவர்கள் செய்த மன்னிக்க முடியாத தவறு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ-வான அமீன் படேல் பேசிய போது வலதுசாரி விமர்சகர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் போஸ், படேல் மற்றும் அம்பேத்கரின் மரபுகளை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அடிக்கடி விமர்சித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் இந்த நிகழ்வு நடந்துள்ளது. காங்கிரஸால் வெளியிடப்படும் விளம்பரங்களில் சரோஜினி நாயுடுவும், லால்பகதூர் சாஸ்திரியும் அரிதாகவே தோன்றுகிறார்கள்.
இந்த விளம்பரம் கடந்த காலத்தில் இருந்து கட்சியின் மிகவும் புகழ்பெற்ற தலைவர்களை முன் வைக்கிறது. அப்பேற்பட்ட விளம்பரத்தில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் படம் இடம் பெறாதது குறித்து ஜெய்ராம் ரமேஷ் உட்பட சில மூத்த தலைவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அதற்காக ஜெய்ராம் ரமேஷ் கட்சி சார்பில் மன்னிப்பு கேட்டார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் இது மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் நடக்காது என நம்புவதாக ராய்பூரில் நடந்த அமர்வில் கலந்து கொண்ட போது அமீன் படேல் கூறினார்.
பி.ஜேம்ஸ் லிசா