நடிகை சமந்தாவிற்கு வந்துள்ள Myositis நோய் என்பது அரிய வகையான நோய் என்றும், இது ஆபத்தான நோய் அல்ல என முடநீக்கியல் நிபுணர் சண்முகானந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சில நாட்களுக்கு முன்பு தான் Myositis என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங் பேசும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைக் கண்ட ரசிகர்கள் அவர் விரைந்து குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதேபோல Myositis நோய் என்றால் என்ன? இது ஆபத்தான நோயா? என்பது குறித்து இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்டது.
இதுதொடர்பாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை மூத்த முடநீக்கியல் நிபுணர் மருத்துவர் பிரிகேடியர் சண்முகானந்தன், “ Myositis நோய் ஒரு சாதாரண நோய் தான். குறிப்பாக 10 லட்சம் பேரில் 4 அல்லது 5 பேருக்கு வரக்கூடிய அரிய வகையான நோய் இது. இது பெரிய அளவிலான ஆபத்தான நோய் கிடையாது. உரிய முறையில் சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம்: என்று தெரிவித்துள்ளார்.