என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? மீரா மிதுன்

தான் ஒரு தமிழ் சாதி பெண் என்பதால் தனக்கு பிரச்சனை கொடுக்கின்றனர் என்று நடிகை மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் பட்டியலின மக்கள் தொடர்பாகவும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறு பரப்பும்…

தான் ஒரு தமிழ் சாதி பெண் என்பதால் தனக்கு பிரச்சனை கொடுக்கின்றனர் என்று நடிகை மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் பட்டியலின மக்கள் தொடர்பாகவும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகை மீரா மிதுன். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருந்தன. இந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் தான் நடக்கும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களையே தவறானவர்கள் என்று சொன்னேன்” என்று குறிப்பிட்டார்.

தான் ஒரு தமிழ் சாதி பெண் என்பதால் தான் எனக்கு பிரச்சனை கொடுக்கின்றனர் என்ற அவர், எவ்வளவு வெற்றி பெற்றாலும் தமிழ்நாட்டில் தனக்கு தொந்தரவுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் கூறினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை மீரா மிதுன் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.