அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நன்கொடை அளித்தார் நடிகர் #AkshayKumar!

நடிகர் அக்ஷ்ய்குமார் குரங்குகளின் உணவிற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய்குமார். கடைசியாக ‘சூரறைப் போற்று’ ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தில் நடித்திருந்தார்.…

நடிகர் அக்ஷ்ய்குமார் குரங்குகளின் உணவிற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய்குமார். கடைசியாக ‘சூரறைப் போற்று’ ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தில் நடித்திருந்தார். அப்படம் சரியான வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் அக்ஷய் குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து அவர் நடித்த சிங்கம் அகைன் நாளை (அக்.31) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியிலுள்ள குரங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1 கோடியை அக்ஷய் குமார் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆஞ்சநேயா சேவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரியா குப்தா, “நாங்கள் குரங்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், அவைகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சில கவனமான நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். நடிகர் அக்ஷய் குமார் பரந்த மனம் கொண்டவர். அவர் பெருந்தன்மையுடன் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.